
ஐபிஎல் ஆரம்பித்து பாதி போட்டிகளுக்கு மேல் முடிந்திருக்கும் நிலையில் இதற்கு மேல் வரும் அனைத்து போட்டிகளும் முக்கியம் என பல அணிகள் அரிந்து சிறப்பாக விளையாடி வருகிறது. அப்படி நேற்று ராஜஸ்தான் அணிக்கும் குஜராத் அணிக்கும் நடந்த போட்டியில் ஒரு சாதனை படைக்கப்பட்டுள்ளது. 14 வயதான சிறுவன் வைபவ் சூர்யவன்சி கடந்த மூன்று போட்டிகளாக களமிறங்கியுள்ளார் என்று நமக்கு நன்றாகவே தெரியும்.
நேற்று சிறப்பான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தி உள்ளார். வெறும் 14 வயதான அந்த சிறுவன் தனது முதல் ஐபிஎல் சதத்தை மூன்றாவது போட்டியிலேயே பதிவு செய்துள்ளார். அவரது பேட்டிங்கில் 11 சிக்ஸர்களும் 7 போர்களும் அடங்கும். வெறும் 38 பந்துகளில் 101 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்த அவர் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளார்.
இந்தியர்களால் அடிக்கப்பட்ட அதிவேக ஐபிஎல் சதம் என்ற சாதனையை நேற்று வைபவ் படைத்திருக்கிறார். மொத்தமாக பார்த்தால் இரண்டாவது இடத்தில் கிரிஸ் கெயிலுக்கு பின்பு இவர் இருக்கிறார். வெறும் 35 பந்துகளில் சதம் அடித்து இந்த சாதனையை அவர் படைத்து ஆட்டநாயகன் விருதையும் பெற்றிருக்கிறார். ராஜஸ்தானின் வெற்றிப் பாதைக்கு வழிவகுத்த இவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.