IPL 2025..!! பெங்களூருவுக்கு தொடரும் வெளி போட்டிகளின் வெற்றி..!! பரிதாபமான நிலையில் ராஜஸ்தான்..!!

ஐபிஎல் ஆரம்பித்து, சூடு பிடித்து வரும் நிலையில் நேற்று 3:30 மணியளவில் பெங்களூரு அணிக்கும் ராஜஸ்தான் அணிக்கும் ஜெய்ப்பூரில் போட்டி நடந்து முடிந்தது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு, முதலில் பௌலிங் செய்வதாக முடிவெடுத்தது.

முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் அணியின் வீரர்கள் 173க்கு 4 விக்கெட்டுகளை விட்டு 20 ஓவரில் தனது பேட்டிங்கை முடித்தது. இதில், ஜெய்ஷ்வால் 75 ரன்கள் எடுத்தார். அனால் மத்த வீரர்கள் அவர்களுக்கு பெரிதும் கய் கொடுக்கவில்லை. பௌலிங்கில் பெங்களூரு அணி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதில் லிவிங்ஸ்டன் மற்றும் சுயாஸ் ஷர்மாவை தவிர மற்ற அனைவரும் தலா 1 விக்கெட்டுகளை எடுத்தனர்.

அடுத்து பேட்டிங் ஆட இறங்கிய பெங்களூரு அணி இதிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதில், பில் சால்ட் 65 ரன்களும் விராட் 62 ரங்களும் எடுத்து அசத்தினர். மற்ற அனைவரும் தனது சம பங்களிப்பை வழங்கியதால் பெங்களூரு இலக்கை 17.3 ஓவரிலேயே பூர்த்தி செய்து ராஜஸ்தான் அணியை வென்றது.

Read Previous

லக்னோவிடம் மண்ணை கவ்விய குஜராத்..!! என்ன நடந்தது தெரியுமா..!!

Read Next

IPL 2025..!! டெல்லியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த மும்பை அணி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular