
ஐபிஎல் போட்டியின் லீக் சுற்றுகள் முடிவடைய இன்னும் சில அணிகளுக்கு மூன்று அல்லது நான்கு போட்டிகள் தான் இருக்கிறது. இந்த வேலையில் ஹைதராபாத் ராஜஸ்தான் மற்றும் சென்னை அணிகள் அடுத்த சுற்றுக்கு தேர்வாகாது என்று முடிவாகிவிட்டது. ஆனால் இந்த மூன்று அணிகளால் மற்ற அணிகள் அடுத்த சுற்றுக்கு செல்வதை தடுக்கவும் முடியும்.
அந்த வகையில் இன்று சென்னை அணிக்கும் பெங்களூரு அணிக்கும் பெங்களூரில் போட்டி நடக்கவிருக்கிறது. கடைசி இரண்டு போட்டிகளில் பெங்களூரு விடும் சென்னை அணி தோல்வி பெற்றதால் இன்று சென்னை அணி ஜெயிக்குமா என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. கடந்த வருடம் பெங்களூரில் நாம் தோற்றதால் தான் பெங்களூரு அணி பிளே ஆஃப்க்கு சென்றது.
ஆனால் இன்று ஒருவேளை சென்னை அணி ஜெயித்தால் பெங்களூரு முதல் இரண்டு இடத்தை பிடிக்காமல் இருக்க வாய்ப்பு இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் 2020 ஆம் ஆண்டை போல் இனிவரும் போட்டிகளில் ஆவது சென்னை அணி ஜெயித்து தொடரை முடிக்குமா என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.