
New India Assurance Company Limited (NIACL) நிறுவனமானது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Administrative Officers (Generalists & Specialists) பணிகளுக்கான 450 காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு. உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் இறுதி தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.
காலிபணியிடங்கள்:
- Risk Engineer – 36 பணியிடங்கள்
- Automobile Engineer – 96 பணியிடங்கள்
- Legal – 70 பணியிடங்கள்
- Accounts – 30 பணியிடங்கள்
- Health – 75 பணியிடங்கள்
- IT – 23 பணியிடங்கள்
- Generalists – 120 பணியிடங்கள்
கல்வி தகுதி:
அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம் அல்லது பல்கலைகழகத்தில் CA, B.E அல்லது B.Tech, BAMS, BHMS, BDS, MBBS, M.E அல்லது M.Tech, MCA, M.D, M.S, MDS, தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Risk Engineer: Graduation, Post Graduation
- Automobile Engineer: BE/ B.Tech/ ME/ M.Tech in Automobile Engineering, Graduation/ Post Graduation in Mechanical Engineering
- Legal: Graduation/ Post Graduation in Law
- Accounts: CA, Graduation/ Post Graduation
- Health: BAMS, BHMS, BDS, MBBS, MD, MS, MDS, Post Graduation Medical Degree
- IT: BE/ B.Tech/ ME/ M.Tech in IT/ CS, MCA
- Generalists: Graduation, Post Graduation
வயது வரம்பு:
- தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட் ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, 01-ஆகஸ்ட்-2023 தேதியின்படி விண்ணப்பதாரர் குறைந்தபட்ச வயது 21 மற்றும் அதிகபட்சம் 30 வயதுடையவராக இருக்க வேண்டும்.
- OBC (NCL) விண்ணப்பத்தார்களுக்கு 3 ஆண்டுகள், SC/ST விண்ணப்பத்தார்களுக்கு 5 ஆண்டுகள் மற்றும் PWD விண்ணப்பத்தார்களுக்கு 10 ஆண்டுகள் என வயது வரம்பில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் மாத ஊதியம் ரூ.80,000/- வழங்கப்படும்.
விண்ணப்ப கட்டணம்:
- SC/ST/PWBD விண்ணப்பதாரர்கள்: ரூ.100/-
- மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களும்: ரூ.850/-
தேர்வு மையம்:
- Phase-I: சென்னை, கோவை, மதுரை, நாகர்கோவில், சேலம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர்
- Phase – II: சென்னை
தேர்வு செய்யப்படும் முறை:
- Phase-I: Preliminary Examination
- Phase – II: Main Examination (Objective + Descriptive)
- Phase – III: Interview
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 21/08/2023க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.