ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி ஆணையம் (EPFO) எனப்படுவது அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு மாதாந்திர ஊதியத்தில் இருந்து 12% தொகையை, அந்நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் தொழிலாளர் என இருவரும் சேர்ந்து அவ்வாணையத்திற்கு வழங்குவது ஆகும். இந்தத் தொகையில் 1 பகுதி பணியில் இருந்து ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு PF தொகையாக வழங்கப்படும். அந்த வகையில், தற்போது EPFO திட்டத்தில் புதிய மாற்றம் கொண்டு வரப்பட உள்ளதாகவும், இதனால் ஊழியர்களுக்கு அதிக சலுகைகள் கிடைக்க போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, EPFO 3.0 என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளது. இந்த திட்டத்தில் EPFO ஊழியர்களின் டெபாசிட் செய்யும் தொகை அதிகரிப்பு, உச்சவரம்பு மாறுபாடு, ATM கார்டு மூலம் பணம் எடுக்கும் வசதி போன்ற புதிய மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்க படுகிறது. மேலும், இந்த அறிவிப்பு இன்னும் நடைமுறைக்கு வரவில்லை, வந்தால் மக்கள் பயனடைவார்கள் என்பது 100 சதவீதம் உண்மை என்பது குறிப்பிடத்தக்கது.




