PF வாங்குறவங்களுக்கு வந்தாச்சு புதிய அறிவிப்பு..!! இனி நீங்க PF பணத்தை ATM-ல் எடுக்கலாம்..!!
ஊழியர் வருங்கால வைப்பு நிதி ஆனது, EPFO 3.0 என்ற புதிய திட்டத்தை கடந்த டிசம்பர் 2 ம் தேதியன்று மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தில் EPFO ஊழியர்கள் டெபாசிட் செய்யும் தொகை அதிகரிப்பு, உச்சவரம்பு மாறுபாடு, ATM கார்டு மூலம் பணம் எடுக்கும் வசதி போன்ற புதிய மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்ததை தொடர்ந்து, தற்போது இந்த திட்டத்தில் புதிய மாற்றம் ஒன்று நடைமுறைக்கு வர உள்ளதாக EPFO ஆணையம் தெரிவித்துள்ளது.
அதாவது, வருங்கால வைப்பு நிதி தொகையை பெறுபவர்கள் இனி ATM வாயிலாக பணத்தை எடுக்கலாம் என்று தெரிவித்துள்ளது. மேலும், இது அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




