சபரிமலை கோயிலில் கடந்த 2019-இல் மாயமான 4 கிலோ தங்கம், ஐக்கிய அரபு அமீரக தூதரகம் வழியாக வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டிருக்கலாம் என சிபிஐ சந்தேகிக்கிறது. இது தொடர்பாக தூதரக முன்னாள் ஊழியர்களான ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சரித் ஆகியோரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே இவ்வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முறையான ஆதாரங்கள் கிடைத்தால் சர்வதேச கடத்தல் பின்னணி குறித்து அமலாக்கத்துறை தனியாக வழக்கு பதிவு செய்ய திட்டமிட்டுள்ளது.




