பீகாரில் கங்கை ஆற்றில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக, ஆற்றின் கரையோரத்தில் அமைந்திருந்த சுமார் 100 ஆண்டுகள் பழமையான துர்கா கோயில் இடிந்து ஆற்றுக்குள் சரிந்து அடித்துச் செல்லப்பட்டது. கோயில் வெள்ளத்தில் சிக்கி இடிந்து விழும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. தொடர்ந்து கங்கை ஆற்றின் நீர்மட்டமும், வெள்ளத்தின் தாக்கமும் அதிகரித்து வருவதால் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பு குறித்து அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆபத்தான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை பாதுகாப்பான இடங்கள் மற்றும் நிவாரண முகாம்களுக்கு மாற்றும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.




