நடிகை அனுபமா பரமேஸ்வரன், தன்னால் வெளிப்படையாக சொல்ல முடியாத அளவுக்கு மன அழுத்தத்தை எதிர்கொண்டு வருவதாகவும், தற்கொலைக்கு முயன்றதாகவும் உருக்கமாக பேசியுள்ளார்.
எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க விரும்பும் நபர் தான் என்றும், ஆனால் தற்போது மகிழ்ச்சியாக இருப்பது போல் நடித்துக்கொண்டிருப்பதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
‘கொடி’, ‘டிராகன்’, ‘பைசன்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள அனுபமாவின் இந்தப் பேச்சு, அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.




