மாலை நேரத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய இனிப்பு வகைகளில் ரவா அல்வாவும் ஒன்று. வீட்டிலேயே எளிதாக கிடைக்கும் பொருட்களை வைத்து நெய் மணத்துடன் சுவையான ரவா அல்வாவை தயார் செய்யலாம்.
அரை கப் முதல் ஒரு கப் ரவை வரை பயன்படுத்தி மென்மையான, சுவையான அல்வாவை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
ரவை – 1 கப்
பால் – 2 கப்
வெல்லம் – 2 முதல் 3 கப் (சுவைக்கேற்ப)
முந்திரி – தேவையான அளவு
உலர் திராட்சை – தேவையான அளவு
நெய் – தேவையான அளவு
ஏலக்காய் – சிறிதளவு
செய்முறை:
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு நெய் சேர்க்கவும். நெய் சூடானதும் முந்திரி மற்றும் உலர் திராட்சையை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, தனியாக எடுத்து வைக்கவும்.
அதே கடாயில் வெல்லத்தை சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு கரைய விடவும். பின்னர் ஏலக்காயை பொடித்து சேர்க்கவும்.
அடுத்து ரவையின் அளவுக்கு ஏற்ப தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். இதற்கிடையில் ஒரு பாத்திரத்தில் ரவை மற்றும் பாலை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
இந்த கலவையை கொதிக்கும் வெல்ல பாகில் சேர்த்து கட்டிகள் இல்லாமல் தொடர்ந்து கிளறவும். ரவை நன்றாக வெந்து அல்வா பதத்திற்கு வந்ததும், வதக்கி வைத்த முந்திரி மற்றும் உலர் திராட்சையை சேர்த்து கிளறவும்.
இறுதியாக சிறிதளவு நெய் சேர்த்து கிளறி இறக்கினால், நெய் மணம் கமழும் சுவையான ரவா அல்வா தயார்.
மாலை நேர சிற்றுண்டியாகவும், விசேஷ நாட்களிலும் இந்த ரவா அல்வாவை செய்து குடும்பத்தினருடன் சுவைத்து மகிழலாம்.




