விழுந்தமாவடி கிராமத்தில் திருமணமாகாத இளைஞர்கள் மது அருந்த அதிரடித் தடை!

 

நாகப்பட்டினம் மாவட்டம் விழுந்தமாவடி கிராமத்தில் திருமணமாகாத இளைஞர்கள் மது அருந்த ஊர் பஞ்சாயத்து அதிரடியாக தடை விதித்துள்ளது.

இந்த தடையை மீறி மது அருந்தும் திருமணமாகாத இளைஞர்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மது அருந்திவிட்டு தகராறில் ஈடுபடும் திருமணமானவர்களுக்கும் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.2,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் ஊர் பஞ்சாயத்து அறிவித்துள்ளது.

Read Previous

சுதந்திர தினத்தையொட்டி நாளை கிராம சபை கூட்டம்: அமைச்சர் ஆனந்த் அழைப்பு!

Read Next

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரே நாளில் ரூ.4.68 கோடி உண்டியல் வசூல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular