அமைச்சர் கே.என்.நேரு மீது ரூ.1,020 கோடி ஊழல் புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய கோரி அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் இன்பதுரை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில், நகராட்சி நிர்வாக துறையில் நடைபெற்ற பணியாளர் நியமனங்கள் மற்றும் ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதில் பெருமளவில் முறைகேடுகள் நடந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.




