ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா தனக்கு எதிராக அவதூறு பரப்ப தடை விதிக்க கோரி மாதம்பட்டி ரங்கராஜ் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஜன.7) தள்ளுபடி செய்துள்ளது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், சமீபத்தில் ஆண் குழந்தையை பெற்றெடுத்த ஜாய், அந்த குழந்தை மாதம்பட்டி ரங்கராஜுடையதுதான் என்றும், அதனை நிரூபிக்க ‘டிஎன்ஏ’ (DNA) பரிசோதனைக்கு தான் தயார் என்றும் சவால் விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




