உக்ரைனின் ஒடேசா பிராந்தியத்தில் சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலின் இன்ஜின் மீது ரஷ்ய ராணுவம் டிரோன் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தாக்குதலில் ரயிலின் ஓட்டுநர் மற்றும் அவரது உதவியாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தாக்குதலால் ரயிலின் முன்பகுதி தீப்பற்றி எரிந்தது.
எனினும், ரயிலில் பயணித்த பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
உக்ரைன்-ரஷ்யா இடையேயான போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், பயணிகள் ரயிலை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.




