Oplus_16908288
காவிரி நீர் பங்கீடு விவகாரத்தை முன்வைத்து கர்நாடகாவில் கன்னட அமைப்புகள் இன்று (ஆகஸ்ட் 13) முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.
இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசுப் பேருந்துகளை கர்நாடக எல்லையான ஓசூரிலேயே நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஓசூர் – கர்நாடகா மற்றும் கர்நாடகா – தமிழ்நாடு இடையே பேருந்துகள் இயக்கப்பட்டாலும், பயணிகளின் எண்ணிக்கை குறைவாக காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சத்தியமங்கலம் வழியாக கர்நாடகாவுக்கு இயக்கப்படும் தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் 14 பேருந்துகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்தப்பட்டுள்ளன.
முழு அடைப்பு போராட்டத்தை முன்னிட்டு இரு மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், பயணிகள் பயணத்தை திட்டமிடுவதற்கு முன்பு நிலைமையை அறிந்துகொள்வது நல்லது.




