தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்டு நகைக்கடன் பெற்றவர்களுக்கு தள்ளுபடி வழங்குவது தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
நகைக்கடன் மற்றும் பயிர்க்கடன் தள்ளுபடி குறித்து சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், இதுதொடர்பாக அரசு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் விஜய் நகைக்கடன் மற்றும் பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பை வெளியிடலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான பிறகே தள்ளுபடி குறித்த முழுமையான விவரங்கள் தெரியவரும்.




