சேலத்தில் 13 வயது சிறுமிக்கு மது கொடுத்து, ஓராண்டுக்கும் மேலாக பாலியல் வன்கொடுமை செய்ததாக பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு, முதற்கட்டமாக 3 பேரை கைது செய்துள்ளனர். மேலும், சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் 14 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுமியின் பாதுகாப்பு மற்றும் வழக்கின் உண்மைத் தன்மை குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




