டெல்லி ஜகத்புரி பகுதியில் மனைவி கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் அவரது கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், நீண்டகாலமாக இருந்து வந்த சொத்து தொடர்பான பிரச்சினை இந்தச் சம்பவத்துக்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மேலும், ஹாலிவுட் குற்றப் பின்னணி கொண்ட ‘தி ஸ்டேர்கேஸ்’ தொடரில் இடம்பெறும் சம்பவங்களால் ஈர்க்கப்பட்டு, குற்றத்தை திட்டமிட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
மனைவியின் மரணத்தை வேறு விதமாக சித்தரிக்க முயன்றதாகவும், சம்பவத்துக்குப் பிறகு பணத்துடன் தப்பிச் செல்ல முயன்றதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
தற்போது சிசிடிவி காட்சிகள், தடயவியல் ஆதாரங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து, கொலைக்கான உண்மையான காரணம் மற்றும் சம்பவத்தின் முழுப் பின்னணி குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.




