இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது குறித்து, தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத்திடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அமைச்சர், “இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. நாளை மறுநாள் (ஆக.18) டெல்லி சென்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து நல்ல முடிவு எடுக்கப்படும்” என்றார்.
மேலும், தமிழக மீனவர்களின் பிரச்னையில் தவெக அரசு உணர்வுப்பூர்வமான நடவடிக்கைகளை செயல்படுத்தும் என்றும் அமைச்சர் ஸ்ரீநாத் தெரிவித்தார்.




