Oplus_16908288
தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் தீபாவளிக்குள் தரமான அரிசி வழங்க நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் பி. வெங்கடரமணன் தெரிவித்துள்ளார்.
இதற்காக நெல் கொள்முதல் நிலையங்கள், சேமிப்பு கிடங்குகள் மற்றும் அரிசி ஆலைகளில் அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருவதாக அவர் கூறியுள்ளார். அரிசியின் தரத்தை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், சன்ன ரக நெல் கொள்முதலை அதிகரித்து, பொதுமக்களுக்கு உயர்தர அரிசி கிடைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ரேஷன் அரிசி தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் தீபாவளிக்குள் தரமான அரிசி விநியோகம் உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.




