பள்ளி வளாகத்தில் மாணவருக்கு கத்திக்குத்து: சிவகங்கையில் அதிர்ச்சி!

Oplus_16908288

 

 

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், 12-ம் வகுப்பு மாணவர் ஒருவர் சக மாணவரால் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இரு மாணவர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், ஒரு மாணவர் மற்றொரு மாணவரை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் பள்ளி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

 

கத்திக்குத்தில் காயமடைந்த மாணவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை குறித்த கூடுதல் தகவல்கள் வெளியாகவில்லை.

 

சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி வளாகத்தில் மாணவர்களின் பாதுகாப்பு குறித்து பெற்றோர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் இந்த சம்பவம் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Read Previous

தீபாவளிக்குள் ரேஷன் கடைகளில் தரமான அரிசி: அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular