தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் முதல்முறையாக சுதந்திர தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றிய நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில் முன்வரிசையில் அமர்ந்திருந்த நடிகை த்ரிஷா காவி நிறத்திலும், எஸ்.ஏ.சந்திரசேகர் வெள்ளை நிறத்திலும், ஷோபா பச்சை நிறத்திலும் உடை அணிந்திருந்தனர்.
மூவரும் அணிந்திருந்த உடைகளின் நிறங்களை தேசியக் கொடியின் மூவர்ணத்துடன் ஒப்பிட்டு, ‘தேசிய ஒருமைப்பாடு’ என்ற கருத்துடன் இணையவாசிகள் வீடியோ ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
‘வந்தே மாதரம்’ பாடலுடன் வெளியிடப்பட்ட இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விழாவில் நடைபெற்ற இந்த வித்தியாசமான காட்சியை பலரும் ஆர்வத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.




