உத்தரப் பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் சுதந்திர தின கொண்டாட்டம் நடைபெற்றபோது எதிர்பாராத விபத்து ஏற்பட்டுள்ளது.
பள்ளியின் பால்கனி முகப்புச் சுவர் திடீரென இடிந்து விழுந்ததில், அங்கு இருந்த மாணவர்கள் சிக்கினர். இதில் ஒரு மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் இரண்டு குழந்தைகள் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டு, மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் விபத்து நடந்த இடத்தை நேரில் ஆய்வு செய்து, சுவர் இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




