தஞ்சாவூரில் பள்ளி மாணவி ஒருவருக்கு செல்போன் மூலம் பாலியல் தொல்லை அளித்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், ஆசிரியர் சண்முக சுந்தரராஜ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும், இந்தச் சம்பவத்திற்கு உடந்தையாக செயல்பட்டதாகக் கூறப்படும் அதே பள்ளியைச் சேர்ந்த ஆசிரியை திவ்யாவையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
இருவரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




