TNPSC தேர்வுகள் மூலம் அரசுத் துறைகளில் உள்ள காலியிடங்களை விரைவாக நிரப்புவது தொடர்பாக, முதல்வர் விஜய் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
இந்தக் கூட்டத்தில் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.
ஆகஸ்ட் 5-ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அரசுப் பணியாளர் நியமனங்கள், காலிப்பணியிடங்களை நிரப்பும் நடவடிக்கைகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான பயோமெட்ரிக் வருகைப் பதிவேட்டை விரிவுபடுத்துவது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.




