பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறையில் உயிரிழந்துவிட்டதாக அமெரிக்காவைச் சேர்ந்த பாகிஸ்தான் பத்திரிகையாளர் வஜாஹத் சயீத் கான் பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளார்.
பாகிஸ்தான் ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் மூவர் தன்னிடம் இந்தத் தகவலை தெரிவித்ததாகவும், அதிகாரப்பூர்வமற்ற வழிகள் மூலம் தங்களுக்கும் இந்தச் செய்தி கிடைத்ததாக அந்த அதிகாரிகள் கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், இம்ரான் கான் உயிரிழந்ததாக பாகிஸ்தான் அரசு தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. எனவே, இந்தத் தகவல் தற்போது உறுதிப்படுத்தப்படாத தகவலாகவே உள்ளது.




