தமிழகம் முழுவதும் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது காவல்துறை சிறப்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 11 வரை நடைபெற்ற இந்த நடவடிக்கையில், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையதாகக் கூறப்படும் 1,577 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாநிலம் முழுவதும் சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பதுடன், குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.




