கோவையில் தொடரும் கொலைகள்! வீட்டில் பெண் சடலமாக மீட்பு – 10 நாட்களில் 4வது மரணம்?

 

 

கோவை பாப்பநாயக்கன்பாளையம் கருப்புக்கால் தோட்டம் பகுதியில் சாந்தி (58) என்பவர் தனது வீட்டில் படுகாயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

 

சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், சாந்தியின் உடலை மீட்டு விசாரணையை தொடங்கியுள்ளனர். அவரது மரணத்திற்கான காரணம் மற்றும் சம்பவத்தின் பின்னணி குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

 

இதனிடையே, கடந்த 10 நாட்களில் கோவையில் நவீன் (3ஆம் தேதி), அஸ்வின் (6ஆம் தேதி), அமுதன் (10ஆம் தேதி) ஆகிய 3 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவங்கள் ஏற்கெனவே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

 

தற்போது சாந்தியும் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதால், கோவையில் அடுத்தடுத்து நடைபெறும் குற்றச் சம்பவங்கள் குறித்து பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. அனைத்து சம்பவங்கள் தொடர்பாகவும் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Previous

திருமணத்திற்கு சில மாதங்களே இருந்த நிலையில் சோகம்! காதல் ஜோடி மர்ம மரணம்!

Read Next

அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம்! தமிழக அரசு புதிய அரசாணை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular