மக்களவை சபாநாயகர் அளித்த தேநீர் விருந்தை ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் ஒட்டுமொத்தமாக புறக்கணித்த நிலையில், திமுக எம்.பி. கனிமொழி அதில் பங்கேற்றது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து விளக்கமளித்த கனிமொழி, நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர்களுக்கான இருக்கைகளை மாற்றுவது தொடர்பாக பேசுவதற்காகவே சபாநாயகரை சந்தித்ததாக தெரிவித்துள்ளார். தனது சந்திப்பில் எந்தவித சர்ச்சையும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், ‘இந்தியா’ கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெற்றுள்ளதே தவிர, திமுக இடம்பெறவில்லை என்றும் கனிமொழி தெரிவித்துள்ளார். அவரது இந்த விளக்கம் அரசியல் வட்டாரத்தில் மேலும் கவனம் பெற்றுள்ளது.




