தமிழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கை 5% சரிவு!

 

 

தமிழ்நாட்டில் நடப்பாண்டு பொறியியல் மாணவர் சேர்க்கை, கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 5 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கடந்த ஆண்டு 2-ம் சுற்று கலந்தாய்வு முடிவில் 46.34% இடங்கள் நிரம்பியிருந்த நிலையில், இந்த ஆண்டு 2-ம் சுற்று முடிவில் 41.15% இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன.

 

நடப்பாண்டுக்கான 2-ம் சுற்று கலந்தாய்வு நிறைவடைந்த நிலையில், 88,930 மாணவர்களுக்கு பொறியியல் கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை குழு தெரிவித்துள்ளது.

 

இதனிடையே, துணைத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை ஆன்லைனில் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

எனவே, தகுதியுள்ள மாணவர்கள் காலக்கெடுவுக்குள் அதிகாரப்பூர்வ TNEA இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Read Previous

ரேஷன் அட்டையுடன் ஆதார் இணைப்பு கட்டாயம்! புதுச்சேரியில் புதிய அறிவிப்பு!

Read Next

‘டாக்ஸிக்’ நெருக்கமான காட்சிகள்: மனம் திறந்த யஷ்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular