ரேஷன் அட்டையுடன் ஆதார் இணைப்பு கட்டாயம்! புதுச்சேரியில் புதிய அறிவிப்பு!

 

 

புதுச்சேரியில் ரேஷன் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்காத பயனாளர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை உள்ளிட்ட சலுகைகள் நிறுத்தப்படும் என குடிமைப் பொருள் வழங்கல்துறை அறிவித்துள்ளது.

 

எனவே, தங்களது ஆதார் இணைப்பை விரைந்து முடிக்குமாறும், இல்லையெனில் அரசு வழங்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம் என்றும் பயனாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

புதுச்சேரியில் மஞ்சள் ரேஷன் அட்டைக்கு 10 கிலோவும், சிவப்பு ரேஷன் அட்டைக்கு 20 கிலோவும் இலவச அரிசி வழங்கப்படுகிறது. இதுதவிர, பண்டிகை காலங்களில் பொதுமக்களுக்கு சிறப்புப் பரிசுத் தொகுப்புகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

 

அரசின் நலத்திட்ட சலுகைகள் தொடர்ந்து கிடைக்க, தகுதியான பயனாளர்கள் தங்களது ரேஷன் அட்டை–ஆதார் இணைப்பை விரைவாக முடித்துக்கொள்வது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Previous

பெங்களூரு பள்ளியில் 500 மாணவர்கள், 21 ஆசிரியர்களுக்கு காய்ச்சல்!

Read Next

தமிழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கை 5% சரிவு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular