அமுதன் கொலை வழக்கு குறித்து சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி குறித்து அவர் பேசத் தொடங்கியதும், திமுக உறுப்பினர்கள் எழுந்து நின்று குரல் கொடுத்தனர்.
இதனால் ஆவேசமடைந்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “நீங்க 57 பேர்; நாங்க 106 பேர். நாங்கள் எழுந்து நின்றால் நீங்கள் யாருமே பேச முடியாது” என காட்டமாக தெரிவித்தார்.
அமைச்சரின் இந்தக் கருத்தை அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதாக சபாநாயகர் அறிவித்தார். இதையடுத்து ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே காரசாரமான வாக்குவாதம் நடைபெற்றதால் பேரவையில் பரபரப்பு ஏற்பட்டது.




