கடந்த ஆட்சியைப் போலவே தற்போதைய ஆட்சியிலும் போதைப்பொருள் புழக்கமும், பெண்களுக்கு எதிரான குற்றங்களும் தொடர்ந்து நடைபெற்று வருவதாக பாமக எம்எல்ஏ கணேஷ்குமார் சட்டப்பேரவையில் குற்றம்சாட்டினார்.
இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் இருக்க, அரசு முழு வெளிப்படைத்தன்மையுடன் விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், மாணவர்கள் அமுதன் மற்றும் தனுஷ் ஆகியோரின் கொலை வழக்குகள் குறித்து ஓய்வுபெற்ற நீதியரசர் தலைமையில் சிறப்பு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் கணேஷ்குமார் கோரிக்கை விடுத்தார்.




