கடந்த திமுக ஆட்சியில் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளும், போக்சோ வழக்குகளும் 40% அளவுக்கு அதிகரித்ததாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டப்பேரவையில் குற்றம்சாட்டினார்.
மேலும், இரண்டரை வயது குழந்தைக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கில் திமுக நிர்வாகி மீது FIR பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், “இதுகுறித்து துணை முதல்வராக இருந்த உதயநிதி என்ன பேசினார்?” என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து, போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக உதயநிதி என்ன நடவடிக்கை எடுத்தார் என்றும் அமைச்சர் விமர்சித்தார்.




