ஆயுஷ்மான் பாரத் (PM-JAY) திட்டத்தின் மூலம் தகுதியுள்ள ஏழை மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை கட்டணமில்லா மருத்துவச் சிகிச்சை வழங்கப்படுகிறது.
பயனாளிகள் தங்களுக்கான ஆயுஷ்மான் கார்டை எளிதாகப் பெற, +91 72908 23838 என்ற எண்ணிற்கு வாட்ஸ்ஆப்பில் ‘Hi’ என மெசேஜ் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்பிறகு வரும் தேர்வுகளில் ‘My Ayushman Card’ என்பதைத் தேர்வு செய்து, கேட்கப்படும் விவரங்களை பூர்த்தி செய்து e-KYC நடைமுறையை முடிக்க வேண்டும்.
e-KYC நிறைவடைந்ததும், தகுதி உறுதி செய்யப்பட்ட பயனாளிகள் தங்களது ஆயுஷ்மான் கார்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மருத்துவ சிகிச்சை பெறும் போது இந்த அட்டை பயன்படும் என்பதால், தகுதியுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ சேனல் மூலமாக மட்டுமே விவரங்களை சரிபார்த்து பயன்படுத்துவது பாதுகாப்பானது.




