ஹெல்மெட் இல்லாமல் வரும் போலீசாரின் வாகனம் பறிமுதல்! ஒரு நாள் ‘ஆப்சென்ட்’ போட்டு நடவடிக்கை!

 

 

சட்டத்தை அமல்படுத்த வேண்டிய காவல்துறையினரே ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுவது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருவது காவல்துறைக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது.

 

இதனைத் தவிர்க்கும் வகையில், மண்டல ஐ.ஜி.க்கள் காவல்துறை அதிகாரிகளுக்கு புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வரும் போலீசாரின் வாகனங்களை பறிமுதல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

மேலும், விதிமுறைகளை மீறும் காவலர்களுக்கு கட்டாயமாக ஒரு நாள் ‘ஆப்சென்ட்’ போட்டு, ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட எஸ்.பி.க்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சாலை பாதுகாப்பு விதிகளை பொதுமக்களுக்கு வலியுறுத்தும் காவல்துறையினரே அவற்றை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.

Read Previous

தமிழ்நாட்டுக்கு எதிரான திட்டங்களை நிச்சயம் எதிர்ப்போம்! முதல்வர் விஜய் அதிரடி பேச்சு!

Read Next

ஓபிஎஸ்-க்கு திமுகவில் முக்கிய பதவி? தென்மண்டல அமைப்புச் செயலாளர் பதவி வழங்க திட்டமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular