5-ம் தலைமுறை போர் விமானங்களுக்கு என்ஜின்: ரிலையன்ஸ்–ரோல்ஸ் ராய்ஸ் புதிய கூட்டணி!

இந்தியாவின் 5-ம் தலைமுறை போர் விமானங்களுக்குத் தேவையான என்ஜின்களை உள்நாட்டிலேயே உருவாக்க ரிலையன்ஸ் மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனங்கள் இணைந்து செயல்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிநவீன விமான புரோபல்சன் தொழில்நுட்பத்தில் ரோல்ஸ் ராய்ஸுக்கு உள்ள அனுபவத்தையும், ரிலையன்ஸின் தொழில்நுட்ப மற்றும் உற்பத்தித் திறன்களையும் ஒருங்கிணைத்து புதிய விமான என்ஜினை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த கூட்டணியின் மூலம் இந்தியாவிலேயே விமான என்ஜின் தொடர்பான தொழில்நுட்பத்தை மேம்படுத்தி, உள்நாட்டு உற்பத்தித் திறனை அதிகரிக்க இரு நிறுவனங்களும் திட்டமிட்டுள்ளன.

இந்த முயற்சி இந்தியாவின் பாதுகாப்புத் துறையில் வெளிநாட்டு சார்பை குறைத்து, அதிநவீன போர் விமான தொழில்நுட்பத்தில் நாட்டின் திறனை வலுப்படுத்தும் முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

Read Previous

மீனாட்சி மிஷன் மருத்துவமனை குறித்து சர்ச்சை: தேவர் சமுதாய தலைவர்கள் கூட்டமைப்பு எச்சரிக்கை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular