இந்தியாவில் தற்போது UPI மூலம் பணம் அனுப்புவதற்கும் பெறுவதற்கும் பயனர்களிடம் நேரடி கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. ஆனால், UPI கட்டமைப்பை பராமரித்து இயக்குவதற்கான செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அதிக மதிப்புள்ள சில பரிவர்த்தனைகளுக்கு MDR எனப்படும் கட்டணத்தை விதிப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளை, சிறிய தொகை பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கப்படாது என கூறப்படுகிறது. இருப்பினும், UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிப்பது தொடர்பாக மத்திய அரசு இதுவரை எந்த இறுதி முடிவையும் எடுக்கவில்லை. எனவே, தற்போது UPI பயன்படுத்துபவர்கள் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை இல்லை.




