இப்போது இருக்கும் காலகட்டத்தில் அனைவருக்கும் மன அழுத்தம் என்னும் நோய் இருக்கிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த நோயால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். இந்த நோய்க்கு நாம் சாப்பிடும் உணவுகளும் ஒரு முக்கிய காரணம் ஆகும். நாம் சாப்பிடும் உணவுகள் காலம் காலமாக மாறிக்கொண்டே தான் செல்கிறது. அப்படி மாறுவதாலேயே பல பிரச்சனைகளும் ஏற்படுகிறது. இந்த பதிவில் எந்த குறைபாட்டினால் மன அழுத்தம் வருகிறது என்று காண்போம்.
மன அழுத்தம் கால்சியம் குறைபாட்டினால் தான் வருகிறது. கால்சியம் குறைபாட்டிற்கு காரணம் நாம் சாப்பிடும் உணவுகள் தான். கால்சியம் இல்லையெனில் மன அழுத்தம் மட்டும் இல்லாமல் எலும்பு பலவீனம் பசை இன்மை மாதவிடாய் பிரச்சனை எலும்பு ஆரோக்கியம் போன்றவை பாதிக்கப்படும்.
இந்த கால்சியத்தை உட்கொள்ள நாம் சில உணவுகளை சாப்பிட வேண்டும். பால் மற்றும் பாலினால் தயாரிக்கப்படும் உணவுகள், முட்டை, கீரைகள், முட்டைகோஸ், காலிஃப்ளவர், கொத்தமல்லி போன்றவற்றில் கால்சியம் அதிகமாகவே இருக்கிறது. இது மட்டுமில்லாமல் சோயா மற்றும் ஆலிவ் எண்ணெய்களில் கால்சியம் அதிகமாக உள்ளது. இந்த உணவுகளை எல்லாம் உட்கொண்டு கால்சியம் குறைபாட்டை தீர்த்து வைப்பது நமது கடமை ஆகம்.




