லேப்டாப் சார்ஜர் போடும்போது மின்சாரம் தாக்கி மாணவர் உயிரிழப்பு!
திருவள்ளூர் மாவட்டம் பெரியகுப்பத்தில் லேப்டாப் சார்ஜர் போடும்போது மின்சாரம் தாக்கி 11-ம் வகுப்பு மாணவர் சீனிவாசன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக அங்கு சென்று மாணவரின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.




