கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை..!! டிஜிபி பதிலளிக்க உத்தரவு..!!

கோவையில் 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தமிழக டிஜிபி பதிலளிக்க தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கோவை குனியமுத்தூர் பகுதியில் கல்லூரி மாணவர்கள் 7 பேர் அறை எடுத்து தங்கி பயின்று வரும் நிலையில் Snapchat மூலம் பழக்கம் ஏற்பட்ட 17 வயது மாணவியை அறைக்கு அழைத்து  கூட்டுபாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கல்லூரி மாணவர்கள் 7 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக டிஜிபி 3 நாட்களில் பதிலளிக்க தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Read Previous

பட்டாம்பூச்சியால் பறிபோன உயிர்..!! பிரேசிலை உலுக்கும் 14 வயது சிறுவனின் மரணம்..!!

Read Next

வாழைப் பழத்தில் இத்தனை ரகங்கள் உள்ளதா?.. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular