காங்கோ ஜனநாயகக் குடியரசின் கிழக்கு பகுதியில் உள்ள ருபாயா தங்கச் சுரங்கத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அந்நாட்டு சுரங்கத் துறை தெரிவித்துள்ளது. பலர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களில் சுமார் 70 குழந்தைகளும் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சுரங்கம் கிளர்ச்சி குழுவின் கட்டுப்பாட்டில் உள்ளது.




