குழந்தைகளுக்கு கிட்டப்பார்வை அதிகரிக்கிறதா? இதை கவனியுங்கள்!
ஆன்லைன் வகுப்புகள், செல்போன், டிவி மற்றும் புத்தகங்களை நீண்ட நேரம் பார்ப்பது போன்ற காரணங்களால் குழந்தைகளின் கண்களுக்கு அதிக அழுத்தம் ஏற்பட்டு, கிட்டப்பார்வை (Myopia) அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. கொரோனா காலத்துக்குப் பிறகு குழந்தைகளின் திரை நேரம் அதிகரித்திருப்பதும் இதற்கு ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.




