தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம் மற்றும் அசாம் ஆகிய 5 மாநிலங்களில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், அது குறித்த முக்கிய ஆலோசனையை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் இன்று (மார்ச் 11) டெல்லியில் நடத்துகிறார். இந்த உயர்மட்டக் கூட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிகள் மற்றும் வாக்குப்பதிவு அட்டவணை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு, இறுதி முடிவுகள் எடுக்கப்படும் என கூறப்படுகிறது.




