கடன் செயலி ஊழியர்கள் தனது நிர்வாண படத்தை உறவினர்களுக்கு அனுப்பியதால் இளைஞர் தற்கொலை செய்தார். கேரளாவின் திருவனந்தபுரம் ஆர்யநாட்டைச் சேர்ந்தவர் ஆனந்த் (21). இவர் ஆன்லைன் செயலியில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவரது புகைப்படத்தை நிர்வாணமாக மார்பிங் செய்து உறவினர்களுக்கு கடன் செயலி நிறுவன ஊழியர்கள் அனுப்பி மிரட்டியுள்ளனர். அவமானம் தாங்க முடியாத ஆனந்த் ஆசிட் குடித்தார். திங்கள்கிழமை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.




