அனைவரும் விரும்பும் வகையில் ருசியான முறையில் சௌசௌ காய் பொரியல் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம்..
சௌசௌ காய் அதிகளவு நீர்ச்சத்து நடந்தது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது சாம்பாருக்கு வைத்து சாப்பிட்டால் அவ்வளவு ருசியாக இருக்கும் ஆனால் இதனை பெரும்பாலும் விரும்பி சாப்பிடுவதில்லை,இதனை வைத்து கூட்டும் செய்வார்கள் ஆனால் பலருக்கு இந்த காய் பிடிக்காது சுவையாக இல்லை எனக் கூறி அதனை முற்றிலும் தவிர்ப்போரை அதிகம். அப்படி இருக்கையில் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இந்த காயை கொண்டு பொரியல் செய்வது எப்படி என்று இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்,ஒரு ஸ்பூன் கடுகு எண்ணெய் 3 ஸ்பூன் கடலைப்பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு தலா ஒரு ஸ்பூன் கருவேப்பிலை ஒரு கொத்து கால் கப் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் அல்லது பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கிய பூண்டு மூணு அரை கிலோ சௌசௌ காய் பொடியாக நறுக்கியது கொத்தமல்லி தண்ணீர் கால் கப் மற்றும் உப்பு தேவையான அளவு, பச்சை மிளகாய் இரண்டு சீரகம் அரை ஸ்பூன் மற்றும் இரண்டு பொடியாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும், படிப்பில் ஒரு கடாய் எடுத்து வைத்து அதில் எண்ணெய் ஊற்றுங்கள் எண்ணெய் காய்ந்ததும் கடுகு சேர்த்து பொரிய விடவும் அதனைத் தொடர்ந்து அதில் கடலைப்பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு பொன்னிறமாக வறுத்துக் கொண்டதும் கருவேப்பிலையை சேர்த்துக் கொள்ளுங்கள்,அடுத்ததாக அதில் நாம் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் பூண்டை சேர்த்து நன்கு வதக்கவும் அவை கண்ணாடி பதத்திற்கு வந்ததும் நறுக்கி வைத்துள்ள சௌசௌ காய் சேர்த்து ஒரு நிமிடம் கிளறி விடவும்,சேர்க்க வேண்டிய மசாலாவை அரைத்துக் கொள்ளுங்கள்,துணி வைத்துள்ள தேங்காய் சீரகம் மற்றும் பச்சை மிளகாய் மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும் காய் வந்ததும் இதில் அரைத்து வைத்துள்ள மசாலாக்களை கிளறிவிட்டு மூன்று நிமிடங்கள் வேக வையுங்கள்,இறுதியாக அதில் கொத்தமல்லி தழைகளை தூவி கீழே இறக்கி வைத்தால் சுவையான சௌசௌ பொரியல் தயார். இதனை மிக எளிதாக வெறும் 10 நிமிடத்தில் செய்து முடித்து விடலாம். ஒரு முறை இவ்வாறு சமைத்து வீட்டில் இருப்பதற்கு கொடுத்துப் பாருங்கள் நிச்சியம் விரும்பி சாப்பிடுவார்கள்…!!




