ஏர்டெல் அறிவித்த புதிய திட்டம்..!! உற்சாகத்தில் ஐபிஎல் ரசிகர்கள்..!!

இந்தக் கோடைகாலம் குழந்தைகளுக்கு விடுமுறை கொடுக்கும் தினங்களாக இருக்கிறது. பொழுதுபோக்கிற்காக குழந்தைகள் தினமும் இரவு வேளையில் ஐபிஎல் பார்த்து வருகின்றனர். குழந்தைகள் மட்டும் இன்றி பெரியவர்களும் இதற்கு அடிமையாகி கிடக்கின்றனர். ஆனால் இப்போதெல்லாம் இரவு நேரங்களில் மழை பெய்து வருவதால் கரண்ட் இல்லாமல் போய்விடுகிறது. ஆகையால் அனைவரும் ஜியோ ஹாட்ஸ்டார் இல் தான் முக்கால்வாசி மேட்ச்களை பார்த்து ரசிக்கின்றனர்.

ஆனால் தேவையான அளவு டேட்டா இல்லையெனில் அதையும் பார்க்க முடியாது. ஆகையால் ஏர்டெல் நிறுவனம் ஐபிஎல் ரசிகர்களை குறி வைத்து ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதாவது 451 ரூபாய்க்கு அறிமுகமாகியுள்ள புதிய திட்டத்தில் மூன்று மாதம் ஜியோ ஹாட்ஸ்டார் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அத்துடன் 50 ஜிபி அதிவேக டேட்டா வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

ஆனால் இதில் வாய்ஸ் கால் மற்றும் மெசேஜ் சலுகைகள் கிடையாது. இதற்கு முன்பாகவே ஏர்டெல் 100 ரூபாய்க்கு ஐந்து ஜிபி டேட்டா மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் 30 நாளைக்காகவும் அல்லது 195 ரூபாய்க்கு 15 ஜிபி டேட்டா ஜியோ ஹாட்ஸ்டார் 90 நாட்களுக்கும் திட்டங்களை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Read Previous

உங்களுக்கு உடல் எடையை குறைக்க வேண்டுமா..!! இந்த அடையை சாப்பிட்டால் போதும்..!!

Read Next

ஒரு அட்டைப் படத்தை வைத்து அந்த புத்தகத்தை கணிக்க கூடாது..!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular