ஒரு சராசரி மனிதனின் இரத்த அழுத்தம் 80 முதல் 120 புள்ளிகளுக்குள் மட்டுமே இருக்க வேண்டும். 80க்கு கீழேயோ 120க்கு மேலேயோ சென்றால் ரத்த அழுத்த பிரச்சனைகள் இருக்கிறது என்று கருதப்படுகிறது. இதனால் உயிரிழக்கக்கூட அபாயம் இருக்கிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த ரத்த அழுத்தத்தை ஏற்படாமல் எப்படி தடுப்பது என்று இந்த பதிவில் தெளிவாக காண்போம்.
ஐந்து செம்பருத்தி இதழ்கள் ஐந்து வெண் தாமரை இதழ்கள் எலுமிச்சை பழ சாறு இவை அனைத்தையும் ஒரு டம்ளர் நீராக வரும் வரை காய்ச்சி குடிக்கலாம். சீரகம் கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து வடிகட்டி அந்த நீரை நிச்சயமாக குடிக்கலாம். நமது இதயத்தை பலப்படுத்த மருதம்பட்டை சூரணத்தை ஒரு கிராம் வீதம் மூன்று வேலை என சாப்பிட வேண்டும். ஐந்து பற்கள் பூண்டுகளை எடுத்து சுட்டு சாப்பிடலாம். இல்லையெனில் இதை நீரில் வேகவைத்தும் சாப்பிடலாம்.
ஒரு கிராம் கசகசாவே அரைத்து பாலில் கலந்து தூங்குவதற்கு இரண்டு மணி நேரம் முன்பாக குடித்தால் தூக்கமின்மை பிரச்சனை முழுமையாக சரியாகும். ஐந்து சிறிய வெங்காயத்தை எடுத்து சிறிய துண்டுகளாக மோரில் கலந்து சாப்பிடலாம். இவையெல்லாம் செய்தால் ரத்த அழுத்த பிரச்சனை குணமாகும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.




