முன்னணி நடிகைகளை பின்னுக்கு தள்ளி விட்டு பயங்கர வேகமாக வளர்ந்து வரும் நடிகை தான் கயாடு லோஹர். ‘டிராகன்’ படத்தின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர். அதனை தொடர்ந்து முன்னணி நடிகர்களான சிம்பு, அதர்வா, ஜீ .வி .பிரகாஷ் ஆகியோருடன் நடித்து வருகிறார். இவர் தற்போது கோலிவுட் திரையுலகில் பிஸியான நடிகைகளில் ஒருவராக உள்ளார்.
‘டிராகன்’ என்ற ஒரு படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு கிடைத்த வரவேற்பு மிகுந்த அதிர்ச்சியை அளித்துள்ளது. அதனை தொடர்ந்து இவர் நடிப்பில் வரும் படங்களை காண ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இது ஒரு புறம் இருக்க, கயாடு ஒரு படத்திற்கு ரூ.2 கோடி சம்பளம் கேட்பதாக கூறப்படுகிறது. இதனால் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சியில் உறைந்து உள்ளனர்.




