கர்நாடகா: பெங்களூருவில் காதலை ஏற்க மறுத்த கல்லூரி மாணவி பட்டப்பகலில் கொலை செய்யப்பட்டார். மல்லேஸ்வரத்தில் உள்ள வணிக வளாகத்திற்கு அருகில் நேற்று மதியம் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. பி.ஃபார்ம் மாணவியான யாமினி பிரியா, வகுப்பு முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, பின் தொடர்ந்து பைக்கில் வந்த ஒரு ஆசாமி அவரது கழுத்தை அறுத்துவிட்டு ஓடினான். உயிருக்கு போராடிய யாமினியை அப்பகுதியினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்த போதிலும் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.




